புத்தளம் மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட செம்பெட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர்.
புத்தளத்திலிருந்து மதுரங்குளி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் சென்ற துவிச்சக்கர வண்டியில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது 49 வயதுடைய வேலிசிமுனபுர பகுதியைச் சேர்ந்தவரும் 46 வயதுடைய வீரபுர பகுதியைச் சேர்ந்தவருமே குறித்த விபத்தில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் புத்தளம் ஆதாத வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
