புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நேற்று மாலை கரைத்தீவு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமை வெளியேறுமாறு கூறி எதிர்ப்பில் ஈடுபட்டனர். வண்ணாத்திவில்லு பொலிஸார் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை பாடசாலை வளாகத்தினுல் நுழையவிடாமல் தடுத்தனர்.
பாராளுமன்றத்தில் 20ற்கு வாக்களித்ததாகக் கூறியும், முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்தமைக்கு ஆதரவு தெரிவித்தமைக்கும், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், இராஜாங்க அமைச்சு பதவியைப் பெறவுள்ளதாகவும் தெரிவித்து மக்கள் கோஷங்களை எழுப்பி எதிர்பில் ஈடுபட்டனர்.


