10ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்!

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று தமிழ் மொழில் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மேலும், கம்பன் கழகத்தின் நிறுவுநர் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று போராட்டக் களத்திற்கு நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *