
தெற்கு அதிவேக வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கௌனிகம – தொடங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இடையில் இந்த வாகன விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் சொகுசு சிற்றூர்ந்து ஒன்றை கடத்தி சென்ற ஒருவர் ஹொரவ்பொத்தானை பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிற்றூர்ந்தை கடத்தி சென்ற போது, யாழ்ப்பாணம் – கண்டி மற்றும் யாழ்ப்பாணம் – திருகோணமலை பிரதான வீதிகளில் பயணித்த முச்சக்கரவண்டி, சிற்றூர்ந்து மற்றும் மகிழுந்து ஆகியவற்றில் விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.