எவரையும் நம்பமுடியாது, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பலப்படுத்த பேராயர் அழைப்பு

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது எனவும் இதன் காரணமாக இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி, அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாக காணப்படுவதால் 74 ஆண்டுகளுக்குள் அழகிய தாய் நாடு சீரழிந்துவிட்டது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இந்நிலையில் ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பேராயர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என பேராயர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே முழு நாடும் நாட்டு மக்களும் ஏமாற்றப்பட்டுள்ள இந்த சூழலில் நாட்டை மீள கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *