கண்டி முதல் கொழும்பு வரை மாபெரும் பாதயாத்திரை!

அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரையை ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் யாத்திரை மே முதலாம் திகதி – மே நாள் அன்று கொழும்பில் முடிவுறுத்தப்படவுள்ளது.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலம் கொடுப்பதே நடைபயணப் போராட்டத்தின் நோக்கம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *