
அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பண்ணை பாலத்தடியில் நேற்று மாலை 6.50 மணியளவில் ஆரம்பித்த இந்தத் தீப்பந்த போராட்டம் அங்கிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலுள்ள பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாகச் சென்றது.
இந்தப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’, ‘சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்’, ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு’, ‘கோத்தா அரசே வீட்டுக்குப் போ’ ‘இனப்படுகொலைக்கு நீதிவேண்டும்’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.