ஜனாதிபதி செயலகத்தை ‘தெறிக்கவிட்ட’ இளையோர்!

காலிமுகத்திடலில் நேற்று 9ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தில், போராட்ட வாசகங்களை வர்ண ஒளிகளால் தெறிக்கச் செய்தனர்.
மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

காலிமுகத்திடலில் ‘கோத்தாகோகம’ கிராமத்தில் தங்கியிருந்து இளைஞர்கள் போராடி வருகின்றனர். ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு வேலியின் வெளிப்புறமாக, போராட்டக்களத்திலிருந்து ‘புரொஜெக்டர்’ மூலம், ஜனாதிபதி செயலக கட்டடத்தில், ராஜபக்ச அரசுக்கு எதிரான தமது போராட்டக்கள வாசகங்களை வர்ண ஒளிகளூடாகத் தெறிக்க விட்டனர்.

ஜனாதிபதி செயலக பாதுகாப்புப் பிரிவினர் இதனைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென இவ்வாறு ஜனாதிபதி செயலக கட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களின் ஒளியுருக்கள் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்புப் பிரிவினர், மறைப்பு ஒன்றை எடுத்து வந்து, ஜனாதிபதி செயலக பாதுகாப்பு வேலியின் உட்புறமாக நின்று, ‘புரொஜெக்டருக்கு’ நேர் எதிரில் நின்று மறைத்தனர். அதன் மூலம் ஜனாதிபதி செயலக கட்டடத்தில் வாசகங்கள் தெறிப்பதை ஓரளவுக்கு தடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *