
மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் (16) பிற்பகல் இடம்பெற்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கம்பளை – கல்வேல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.