நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் நேற்று முன்தினம் (16) பிற்பகல் இடம்பெற்றதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கம்பளை – கல்வேல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *