யாழ் மற்றும் முல்லை இளைஞர்கள் தமிழகத்தில் கைது!

யாழ் முல்லை இளைஞர்கள் தமிழகத்தில் கைது!

மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதியைச்  சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *