சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சித்த பெண் கைது!

திருகோணமலை கிண்ணியா – மாஞ்சோலைசேனை பிரதேச தங்குமிடம் ஒன்றில், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை கைது செய்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவு பொருப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி w.h.c.k பெர்னாந்து தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது மேற்படி பெண் கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட பெண், கொழும்பு வெள்ளவத்தைப்பகுதியை சேர்ந்த 50 வயதுடைவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் கிண்ணியா பிரதேச வாசி ஒருவரிடம் அவரது கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதுடன் மேலும் நால்வரின் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள காத்திருக்கும்போது கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தலா இருவரிடம் 50000 ரூவாயும், மேலும் இருவரிடம் 100000ரூவாயும் முற்பணமாண பெற்றுக்கொண்டதுடன் ஜேர்மன்,இங்கிலாந்து ,கனடா,பிரான்ஸ்போன்ற நாடுகளுக்கு அனுப்புவதாகவே மேற்படி நால்வரிடம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் பணம் கொடுத்த நால்வரும் ஒருநாள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக கொழும்புக்கு இன்று சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *