வீடு திரும்பினார் பசில்

கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஸில் ராஜபக்‌ஷ, அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15 ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இதன்போது அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள் பரப்பப்பட்டிருந்தன.

ஆனால் அவர் அப்போது கொழும்பில் வைத்தியசாலையொன்றிலேயே சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர், வைத்தியசாலையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *