
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்பார்த்துள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு சற்றுமுன் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர்கவனம் செலுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.