புத்தளம் கல்லடி பகுதியில், ஒருவர் வீட்டில் கஞ்சாச் செடி வளர்த்த குற்றச்சாட்டில் விமானப்படைப் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் கல்லடி பகுதியில் வீட்டு முற்றத்தில் கஞ்சாச் செடிகள் வளர்கப்பட்டு வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் இரகசியத் தகவல் கிடைக்கெப்பெற்றுள்ளது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

