நாளை முதல் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகமாக மின் தடைப்படும்

நாடளாவிய ரீதியில் நாளை முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வலயங்களின் அடிப்படையில் நாளை மற்றும் நாளை மறுதினம் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலையங்களில் பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *