
கிளிநொச்சியிலிருந்து கயஸ் வாகனத்தை கடத்தியவர் கொரவபொத்தான பகுதியில் மடக்கி பிடிப்பு!
அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதிய்யில் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயஸ் வாகனத்தை கடத்திச் சென்றவர் கொரவபொத்தான பகுதியில் கைது. நேற்றையதினம் (17.04.2022 ) மாலை சந்தேக நபர் ஒருவரால் கயஸ் ரக வாகனம் கடத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தை A.9பிரதான வீதியூடாக கடத்திச் சென்ற சமயம் வீதி போக்குவரத்து பொலிசார் மறித்தபோதும் நிறுத்தப்படவில்லை.
ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் சோதனைக்காக நிறுத்திய போதும் நிறுத்தாமல் சென்ற நிலையில் கொரவப்பொத்தான பகுதியில் இரண்டு வீதி விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார். அக்கராயான் பொலிசார் வழங்கிய தகவலுக்கமைய கொரவபொத்தான பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(18.04.2022) அக்கராயன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.