இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீர்கொழும்பில் ராஜபக்ச குடும்பத்தினரின் புகைப்படங்களை சவப்பெட்டியில் காட்சிப்படுத்தி ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் உள்ளிட்டோரின் புகைப்படங்களை அதில் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

