எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்றவர் விழுந்து உயிரிழந்தார்! யாழில் துயரம்

யாழ்ப்பாணத்தில் பெற்றோலிற்காக வரிசையில் நின்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (18) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி – நுணாவிலில் உள்ள ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற முதியவரே இவ்வாறு நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *