பசிலின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகும் அபாயம்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அவரிடமிருந்து நிதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி. பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஐ மீண்டும் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எனவே, 20ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் பஸிலுக்கு எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *