தடை அதை உடை;அதிரடி காட்டும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை நேற்றையதினம் ஆர்ப்பாட்டக்கார்களால் ஜனாதிபதி செயலகம் முன்னால் கோ கோம் கோட்டா என்றவாறாக ஒளிக்கற்றைகள் ஜனாதிபதி செயலக முகப்பில் ஒளிரும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த ஒளிக்கற்றைகளை மறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்றையதினம் கோ கோம் கோட்டா என்றவாறு ஜனாதிபதி செயலக வளாகத்தின் மேல் ஒளிக்கற்றைகளால் வானில் தெரியும்படியாக ஒளியை வீசியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *