புதிய சுகாதார அமைச்சகத்தின் மூன்று முக்கிய முடிவுகள்

இலங்கையின் புதிய சுகாதார அமைச்சர் , இன்றிலிருந்து 18.04.2022 கொரோனா தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேலும் புதுப்பித்துள்ளார்.

அதன்படி,

வெளியில் கட்டாயம் முகமூடி அணிவது தேவையில்லை, பொதுப் போக்குவரத்து பயணம் செய்யும் போது மட்டுமே இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தேவையில்லை.

வாடிக்கையாளர், பார்வையாளர் மற்றும் தனிநபர் விபரங்களை திரட்டுதல் அவசியமில்லை.

இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *