
மட்டக்களப்பில் அன்னை பூபதியை நினைவு கூருவதற்கு 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1988 ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 34வது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டாம் என காத்தான்குடி பொலிசாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா. சாணாக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் இ.பிரசன்னா, இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி தலைவர் கி.சேயோண், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணி தலைவர் லோ.திபாகரன், சிவில் அமைப்பு தலைவர் ச.சிவயோகநாதன்,வாழைச்சேனை குணசேகரம் ஆகிய 11 பேருக்கு எதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அன்னை பூபதி நினைவு வணக்கம் அவரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நாவலடி கடல்கரை ஓரம் அமைந்துள்ள கல்லறையில் வழமையாக நினைவு கூரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.