நாம் தவறிழைத்துவிட்டோமென 69 இலட்சம் மக்களும் கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது! சமன் ரத்னப்பிரிய

நாம் தவறிழைத்துவிட்டோம் எனவே வீட்டுக்கு செல்லுங்கள் என்று 69 இலட்சம் மக்களும் ராஜபக்ஷர்களுக்கும் நிலைமை இன்று உருவாகியுள்ளது என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சில் ஈடுபட்டு வருகின்றது.

மொட்டுக் கட்சியில் ஏற்கெனவே அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் மாறிகொடுக்கப்பட்டு புதிய அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு புதிய அமைச்சரவையை நியமிப்பதா தீர்வு?

அமைச்சு மாற்றம் பிரச்சினைகளுக்கான தீர்வு அல்ல என்பது சகலரும் அறிந்ததே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *