இன்றைய மின்தடை குறித்து வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வலயங்களின் அடிப்படையில் இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *