கோட்டா கோ கமவில் செல்பி மற்றும் டிக்டொக் எடுப்பவர்களுக்கு விசேட ஏற்பாடு .

காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகம் முன்னால் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்கபரர்களால் கோட்டா கோ கம என ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உணவு மற்றும் இதர பொருட்களை பல்வேறு தன்னார்வலர்களும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டா கோ கம பகுதியில் செல்பி மற்றும் டிக்டொக் பயன்படுத்துபவர்களுக்குமென “‘இந்த இடம் டிக் டாக் எடுக்கவும் செல்ஃபி எடுக்கவும் மட்டும்”‘ என்றவாறாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் காட்சிப்படுத்தப்பட்ட பனரில் இந்த இடம் டிக் டாக் எடுக்கவும் செல்ஃபி எடுக்கவும் மட்டும் வருபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இங்கு புல் மற்றும் புண்ணாக்கு பக்கெட் மற்றும் புன்னக்கு வாளி வழங்குகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *