இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் பல்கலை மாணவர்களால் இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு மாணவர்களால் மலரஞ்ஞலி செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து பேரணியாக ஈகைச்சுடரேற்றி 1 நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

