அன்னை பூபதியின் 34வது நினைவுதினம் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு.

அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் நிகழ்வுகள் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் அலுவலகமான கிளிநொச்சி அறிவகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நினைவுச் சுடரினையும் ஏற்றி அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினையும் அணிவித்ததுடன் நினைவுரைகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *