எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கான அனைத்து அணுகு சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ரம்புக்கனையில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனை பிரதான வீதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் இருந்து கேகாலை, மாவனெல்லை, குருநாகல் மற்றும் கண்டி வரையான வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்து டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி மற்றும் அளுத்கமவில் இயங்கும் அனைத்து பஸ்களும் சேவையில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளன.




