பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் எகிறும் நிலை!

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று (19) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

அதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பேக்கரி உற்பத்திகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *