
யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதக் கடவையில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் ரயில் மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்து மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்தார்.
சமன்குமார என்ற சிப்பாயே உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளார்.