நாமல் ராஜபக்சவின் பல பில்லியன் சம்பாத்தியம் தொடர்பில் தேடிப்பார்க்கவேண்டும்! – சபையில் எதிர்கட்சி

நாட்டு மக்களை ஏமாற்றி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் உத்தியை மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் அதற்கு தற்போது வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை. கோட்டாபய ராஜபக்சவின் நேற்றைய உரையின் மூலம், முடியாத ஒருவர் பணிகளை முன்கொண்டு சென்றமையை காணமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிக் கொய்ன் முறையின் மூலம் நாமல் ராஜபக்ச சம்பாதித்துள்ள பல பில்லியன்கள் தொடர்பில் தேடி பார்க்கவேண்டும் என்றும் ஹேஸா விதானகே குறிப்பிட்டுள்ளார். சீசெல்ஸ் நாட்டுக்கு சென்று கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேடிப்பார்க்கவேண்டும்.

இந்தநிலையில் இன்று ஏற்பட்டுள்ள நிலை நாளை இதனை விட மோசமாகக் கூடும். அதனை தடுக்கமுடியாது என்றும் ஹேஸா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *