இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது கட்சி உறுப்பினர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு மலரஞ்ஞலி செலுத்தப்பட்டதோடு, தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி 1 நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.



