திருகோணமலை – கண்டி வீதியின் 222 வது இராணுவ முகாம் படைப்பிரிவுக்கு முன்னால் உள்ள பிரதான வீதியை மறித்து சுலோகங்களை ஏந்தி, கோசங்களை எழுப்பி திருகோணமலை இளைஞர்கள் இன்று மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் அரசியல் நிலமை, எரிபொருள் விலையேற்றம், அத்தியவசிய பொருட்களுக்கான விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வீயில் போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது.

