ரம்புக்கன பொலிஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு காலி முகத்திடலில் மௌன அஞ்சலி.

நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து அங்கு மோதல் வெடித்தது.
ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் அதன் பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

இந்நிலையில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *