
கேகாலை – ரம்புக்கனை பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டதில், ஒருவர் உயிரிழந்ததுடன், 24 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவைக்கு அருகில் புகையிரத பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.
இதையடுத்து, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.