ரம்புக்கனை துப்பாக்கி சூடு – பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேருக்கு தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, உயிரிழப்புகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், காயமடைந்தவர்கள் தொடர்பில் விரைவாக சிகிச்சைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *