ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரே ரம்புக்கனையில் உயிரிழப்பு! – வெளியான தகவல்

ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் உறுப்பினரே ரம்புக்கனை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தவர்களையும், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்ப்பதற்காக ருவான் விஜயவர்த்தன, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதாகவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை ஐக்கிய தேசிய கட்சி கண்டித்துள்ளது.

அத்தியாவசியப்பொருட்கள் தங்களிற்கு கிடைக்கவேண்டும் என்றே ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்தை பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை.பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணையை எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *