நாளைய போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் ஆதரவு!

நாடளாவிய ரீதியில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு அனுஷ்டிக்கவுள்ளதாக 300இ ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர்கள் விற்பனை நிலையங்களை மூடி நாளைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

வணிக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு நாளைய போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளதுடன் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனை வணிக நிலையங்களையும் மூடி ஆதரவு தெரிவிக்குமாறு புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *