மாத்தளை பகுதியில் 16 சிறுவன் மீது மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை, உன்னஸ்கிரிய பிரதேசத்தில் மரமொன்றை வெட்டுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த 16 வயது சிறுவன் மீது மரம் விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இந் நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.