ரம்புக்கனை சம்பவம்: மஹிந்த தேசப்பிரிய கண்டனம்

கொழும்பு, ஏப் 19

ரம்புக்கனை சம்பவம் ஒரு மனித படுகொலையாகும் எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக ஆர்ப்பாட்ட காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்வீச்சு தாக்குதலுக்கு பொலிஸாரின் பதில் துப்பாக்கி பிரயோகமா என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *