
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான பொலிஸாரின் தாக்குதலுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரவு வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரின் கொடூர தாக்குதலை கண்டித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரம்புக்கனையில் ஏற்பட்ட கலவரத்தின் போது போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியைத் தொடர்ந்தே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன்,காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.