பொலிஸாருக்கு ஆயுதம் கொடுத்த பிறகு பைத்தியம் பிடித்த நாய்களைப் போல செயற்பட முடியாது! – சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும

துன்பத்தில் இருக்கும் பொதுமக்கள் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டாலும் பொலிஸாரால் ‘நாய்கள்’ போன்று பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது என சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட போராட்ட பதற்றத்தை தடுத்க, போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர், இதில் ஒருவர் கொல்லப்பட்டார், பலர் படுகாயமடைந்தனர்.

கலவரங்களை படிப்படியாகக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஒரு கும்பலை ஒரேயடியாக சுடுவது நிச்சயமாக அதில் ஒன்றல்ல எனவும் குமரப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்துவது போன்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு வேறு வழிகள் உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். “பொலிஸார் ஒரே நேரத்தில் நேரடி தோட்டாக்களால் சுட முடியாது.”

இந்த தாக்குதல் மற்றும் அதன் விளைவுகளுக்கு ஜனாதிபதி, அரசாங்கம், அமைச்சர் மற்றும் பொலிஸாரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற பல அமைப்புக்கள் எதிர்ப்பாளர்களை அவதானமாக கையாள வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியுள்ளதாக குமரப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு ஆயுதம் கொடுத்த பிறகு பைத்தியம் பிடித்த நாய்களைப் போல நடந்து கொள்ள முடியாது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் ஜனாதிபதியின் நடவடிக்கையின் காரணமாகவே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குமாரப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *