ரம்புக்கன சம்பவம்;முரட்டு இரத்தவெறி ஆட்சியை அகற்றுங்கள்-சம்பிக்க வலியுறுத்து!

ரம்புக்கன பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ரம்புக்கன சம்பவம் ராஜபக்ஷ ஆட்சியில் நிராயுதபாணியான எதிர்ப்பாளர் ஒருவரை கொடூரமாக கொன்றதன் மூலம்இ கொலை மற்றும் இரத்தக்களரியை பயன்படுத்தி அதிகாரத்தை பற்றிக்கொள்ளும் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரும் நெருக்கடியிலிருந்தும் மேலும் துயரத்திலிருந்தும் வெளியேற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது!
மக்களாக ஒன்றுபடுங்கள் இந்த முரட்டு இரத்தவெறி ஆட்சியை அகற்றுங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *