ரம்புக்கனவில் நேற்றையதினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கண்டனம் தெரிவித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? தீவு முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது இதுபோன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் உடனடியாக காவல்துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
