முடங்கியது திருமலை – பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியானது அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேருந்து ஒன்று வீதிக்கு குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதேவேளை பாடசாலைக்கும் மாணவர்கள் செல்லவில்லை என பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காலை தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *