பிரதமர் மஹிந்தவின் வீடு முற்றுகை!

தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இலத்திற்கு அருகில் பெருமளவு மக்கள் குவித்துள்னர்.  

ரம்புக்கனையில் நேற்றையதினம் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

கடந்த 4 ஆம் திகதியும் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்ல வீதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *