
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது என்றும் பொலிசார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.