
ரம்புக்கன பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் பிள்ளைகளுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.