காலநிலை ஆர்வலர்கள் 41 பேர் கைது

வீதிகளில் போராட்டங்களை நடத்திய காலநிலை ஆர்வலர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் முக்கிய வீதிகள் பலவற்றினை மறித்து காலநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த போராட்டங்களை பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கென்ட் பொலிஸாரினால் 12 பேரும் ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் பொலிஸாரினால் 16 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *