ரம்புக்கனை ஊரடங்கு; மறு அறிவித்தல் வரை தொடரும் !

ரம்புக்கனை பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்குற்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அந்தப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 33 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து ரம்புக்கனை பொலிஸ் அதிகார பகுதிகளில் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *